Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் மேலும் 203 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 1,458 ஆக உயர்வு

மே 04, 2020 05:17

சென்னை: சென்னையில் நேற்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 266 பேரில் சென்னையில் மட்டும் 203 பேர் உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,458 ஆக அதிகரித்துள்ளது. விழுப்புரத்தில் 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்த பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 170 பேரும், 13 முதல் 60 வயதுக்குள் உள்ளவர்கள் 2564 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 289 பேரும் உள்ளனர். அவர்களில் 2015 ஆண்கள், 1007 பெண்கள், ஒரு திருநங்கை உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்